கோடையிலும் பலன்தரும் 'மஞ்சம் புல்'


விழுப்புரம் பகுதியில் கோடை காலத்திலும் செழிப்பாக வளர்ந்து பயன் தரும் மஞ்சம் புல் பயிர் செய்து விவசாயிகள் லாபம் ஈட்டி வருகின்றனர். தொடர்ந்து பல ஆண்டுகளாக மஞ்சம் புல் (தீவனப் புல்) பயிர் செய்து விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விழுப்புரம் நகராட்சியை ஒட்டிய பகுதியில் உள்ள கீழ்பெரும்பாக்கம், காகுப்பம் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக பல விவசாயிகள் மஞ்சம் புல் பயிர் செய்து வருகின்றனர்.இதனை நிலையான வருமானமுள்ள தொழிலாக செய்து விவசாயிகள் லாபம் ஈட்டி வருகின்றனர்.

சுற்றுப் பகுதியில் வேறெங்கும் இல்லாத அளவில் 25 ஏக்கர் அளவிற்கும் மேற்பட்ட பகுதிகளில் பரவலாக விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த மஞ்சம் புல் பயிரிடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் அதிகளவில் மாடுகள் வைத்திருந்தனர். தற்போது நகரை ஒட்டிய பகுதியான இங்கு விளை நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டு விவசாயம் படிப்படியாக குறைந்து போய் விட்டது. தொடர்ந்து பெரும்பாலான வீடுகளில் மாடுகள் வைத்திருந்தவர்களுக்கு அவைகளுக்கு வழங்க புற்கள் வைக்கோல் போன்றவை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் ஆங்காங்கே இருந்த சிறிய அளவான இடங்களில் மஞ்சம்புற்களை வைத்து தங்களது கால்நடைகளுக்கு அறுத்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். நாளடைவில் பல்வேறு பகுதியில் இருந்து மஞ்சம் புல் வாங்க பலர் வந்ததால் இதன் தேவை அதிகரித்தது. அதனால் சிறிய விவசாயிகள் தங்களுக்கு இருந்த ஒரு ஏக்கர், அரை ஏக்கர் அளவில் புற்களை நிரந்தர பயிராக செய்யத் துவங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

ஆரம்ப காலத்தில் 50 காசு ரூ.1 க்கு ஒரு கட்டு என விற்பனை செய்யத் துவங்கினர். தற்போது அதன் தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது ரூ.3.50 என விற்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட இந்த புற்கள் தொடர்ந்து பயன் தந்து வருகிறது. ஒரு முறை பதியம் வைத்தால் பல ஆண்டுகள் வரை இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும்.

இவ்வாறு வளரும் தளிர்களை 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்து கொண்டே இருக்கலாம். அறுவடையின் போது நாள் ஒன்றுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனையாகி வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வெயிலின் தாக்கத்தால் விவசாய நிலங்களில் புற்கள்கூட கிடைப்பதில்லை. இதனால் மாடுகள் வளர்த்து வரும் விவசாயிகள் அவைகளுக்கு உணவாக மஞ்சம் புல் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது கூடுதலான மஞ்சம் புல் தேவை அதிகரித்துள்ளது. தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலான பகுதியில் புல் விளைச்சலுக்கு பதியம் செய்து வருகின்றனர்.

கோடையாக இருந்தாலும் மழைக்காலமாக இருந்தாலும் அனைத்து சீசன்களிலும் பயன் தரும் இந்த மஞ்சம் புல் பயிர் வகையை விவசாயிகள் செய்து பயன்பெறலாம். இதற்கென அதிகமான இட வசதி தேவையில்லை. சிறிய இடத்தில் கூட பயிர் செய்து தங்களது தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதோடு வெளியில் விற்பனை செய்து வருவாயும் ஈட்டுவதற்கு வாய்ப்புள்ளது. அள்ள அள்ள குறையாத செல்வம் என்பதைப் போல அறுக்க அறுக்க வளர்ந்து பயன் தரும் மஞ்சம் புல் பயிர் செய்து விவசாயிகள் பயன்பெறலாமே.

தகவல்-தினமலர்

கண்பார்வை குறைபாட்டிற்கு நவீன சிகிச்சை


இந்தியாவிலேயே முதன் முறையாக கத்தி இன்றி லேசர் மூலம் கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள "இன்ட்ராலேஸ்' எனும் புதிய கருவியை சென்னை அகர்வால் கண் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் விலை 2 கோடி ரூபாய் ஆகும். ஒரு கண்ணுக்கு வழக்கமாக கட்டணம் 15 ஆயிரம் ரூபாயுடன் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் இதற்கு கட்டணம் ஆகும் என்று நிர்வாக இயக்குனர் அமர்அகவர்வால் தெரிவித்தார்.

கண் மருத்துவத்தில் பல்வேறு சாதனை களை மேற்கொண்டுள்ள அகர்வால் மருத்துவமனை "இன்ட்ராலேஸ்' எனும் லேசர் கருவியை அறிமுகம் செய்துள்ளது. இக்கருவி மூலம் மேம்பட்ட கண் அறுவை சிகிச்சையை வழங்க முடியும்.

புதிய கருவியை அறிமுகம் செய்து வைத்து அகர்வால் கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அமர் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது:

கண் மருத்துவத்தில் ஒரு புதிய மைல்கல்லாக "இன்ட்ராலேஸ்' கருவியை இந்தியாவிலேயே முதன் முறையாக அறிமுகம் செய்துள்ளோம்.

பிளேடு இல்லாமல் லேசர் மூலம் அறுக்கப்படும்
கண் பார்வையில் அதிக குறைபாடு இருந்து "சோடா புட்டி' கண்ணாடி போடுபவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பார்வை பெற லேசிக் லேசர் சிகிச்சை உள்ளது. இதற்கு ஒரு கண்ணிற்கு கட்டணம் 15 ஆயிரம் ரூபாய் ஆகும். இதில் முதலில் பிளேடு மூலம் லென்ஸ் மேல்பாகம் அறுக்கப்படும். 2வது அடுக்கில் லேசர் செலுத்தி கண் குறைபாடு நீக்கப்படும். மீண்டும் மேல் பாகம் மூடப்படும். கண்ணில் கட்டு போட வேண்டியதில்லை. ஒரு மணி நேரத்தில் கண்ணாடி இல்லாமல் தெளிவாக பார்க்கலாம்.

கண் அறுவை சிகிச்சையின் போது தற்போது "மைக்ரோகெரடோம்' என்ற பிளேடு பயன்படுத்தப்படுகிறது. இதை மாற்றி கம்ப்யூட்டர் வழியாக லேசர் முறையில் அறுவை சிகிச்சையை இக்கருவி மூலம் மேற்கொள்ள முடியும். கத்தியின்றி ஒரு அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்பது இக்கருவியின் சிறப்பம்சம். இந்த கருவி மூலம் மேற்கொள்ளப்படும் சிகிச்சை மிக துல்லியமானதாகவும், நோயாளிக்கு அதிக பாதுகாப்பையும் வழங்கும்.

நவீன "இன்ட்ராலேஸ்' முறை பயன் படுத்தப்படும் லேசிக் சிகிச்சை வழியாக "ஸ்டாண்டர்டு' மற்றும் "லேசிக்' ஆகிய இரு சிகிச்சை முறைகளிலும் அதிக அளவிலான நோயாளிகள் பார்வை கூர்திறனை பெறுகிறார்கள் என்பது உலக அளவில் நடத்தப் பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

கண் மாற்று அறுவை சிகிச்சையில் புதுமை

"இன்ட்ராலேஸ்' லேசர் சாதனத்தின் மூலமாக ஒரே நேரத்தில் விழி வெண் படலத்தை (கார்னியா) பல படிமங்களாக வெட்ட முடிவதால் கண் பார்வை யின்மையை ஒழிக்க முடியும். உதாரணமாக, இறந்தவர்களின் கண்களை எடுத்து பார்வை யற்றோருக்கு பொருத்தும் போது நோயாளி யின் விழி வெண்படலத்தின் முன்பகுதி சேதமடைந்திருந்தால் அதை மட்டும் இக்கருவி மூலம் மாற்றி அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

ஒரே கண்ணை 2 ஆக பிரித்து 2 பேருக்கு பொருத்தலாம்

அதே போல் பின்பகுதி சேதமடைந்திருந்தால் அதை மட்டும் தனியாக வெட்டி நோயாளிக்கு பொருத்தி பார்வையளிக்க முடியும். இதன் மூலம் ஒரு கண்ணைக் கொண்டு இருவிதமான குறைபாடு உள்ள இரு பார்வையாற்றவர்களுக்கு பார்வை அளிக்க முடியும் என்பது இந்த கருவியின் சிறப்பம்சம். இந்த சாதனம் இன்டர்நெட் மூலமாக அமெரிக்காவில் உள்ள நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கிருந்து அறுவை சிகிச்சையை ஆய்வு செய்ய முடியும். அறுவை சிகிச்சையின் போது சிறு குறைபாடுகள் ஏதாவது ஏற்படு மானால் அதை உடனுக்குடன் கண்டுபிடித்து சரிபடுத்த இந்த வசதி உதவியாக இருக்கும். "இன்ட்ராலேஸ்' கருவியின் விலை இரண்டு கோடி ரூபாய்.

இவ்வாறு டாக்டர் அமர் அகர்வால் தெரிவித்தார்.

அஞ்சல் துறை சொந்தமாக வங்கி துவங்க திட்டம்

வங்கிகளில் வட்டிவிகிதம் அதிகரித்து வருவதை தொடர்ந்து அஞ்சலக சேமிப்பு கணக்குகள் வங்கிகள் பக்கம் திரும்புவதை தவிர்க்க சொந்தமாக வங்கி தொடங்க அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதிஅமைச்சகத்தை அணுகியுள்ளது.

பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், மாதந்தோறும் வருவாயும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வங்கி அல்லது அஞ்சலகங்களில் மாதாந்திர வருவாய் திட்டத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டுக்கு முன்னர் வரை வங்கிகளில் வட்டிவிகிதம் மிகவும் குறைந்து காணப்பட்ட நிலையில் அஞ்சலக சேமிப்பு கணக்கில் நிறைய பேர் பணம் போட ஆரம்பித்தனர். அஞ்சலகங்களில் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை எல்லா வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகம் ஆகும்.

இந்தக் கணக்கில் பணம் போடுபவர்களுக்கு 9 சதவீட்டி வட்டி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. ஒரு சில வங்கிகள் 10 சதவீதம் வரை வட்டி கொடுக்க ஆரம்பித்துள்ளன. இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ளது. அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் வட்டியை உயர்த்த நிதி அமைச்சகத்தின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. இதனால் அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு இருந்த கவர்ச்சி தற்போது குறைந்து விட்டது. அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருந்தவர்களும் அதை ரத்து செய்து விட்டு வங்கிகளில் டெபாசிட் செய்ய தொடங்கியுள்ளனர்.

இதை தடுத்து நிறுத்தும் நோக்கில் அஞ்சல் துறையும் தனக்கு சொந்தமாக ஒரு வங்கி தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதி கோரி இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. அனுமதி கிடைத்தவுடன் முழுவீச்சில் வங்கி தொடங்குவதற்கான பணிகளில் அஞ்சல் துறை இறங்கும். மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ஷகீல் அகமது இந்த தகவல்களை தெரிவித்தார்.

வேளாண்மையும் பெருந்தொழிலாக வேண்டும்

-என். விட்டல்
(கட்டுரையாளர்: முன்னாள் ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு ஆணையர்.)

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான ""ரிலையன்ஸ்'', தகவல் தொடர்புத் துறையில் ஜாம்பவானாக உருவெடுத்துவரும் சுநீல் மித்தலின் "ஏர்-டெல்' போன்ற நிறுவனங்கள் இப்போது வேளாண்மைத் துறையில் பெரும் அக்கறை எடுத்துவருகின்றன.

மிகப் பிரம்மாண்டமான அளவில் உற்பத்தி, விநியோகம், விற்பனை என்ற தங்களுடைய தொழில்துறை வெற்றி உத்தியை, வேளாண்மைத்துறையிலும் புகுத்த முயல்கின்றன.

"மனிதர்கள் காலில் போட்டுக்கொள்ளும் செருப்புகளும் பூட்ஸ்களும் ஏர்-கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன; வேளாண்துறையில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் போன்றவை மண்டிகளிலும், வெயிலும் தூசும் நிரம்பிய சந்தைகளிலும், வீதிகளிலும் கோணியைப் பரப்பி விற்கப்படுகின்றன' என்று ஆமதாபாதில் இந்திய நிர்வாகவியல் மாணவர்களிடையே உரை நிகழ்த்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கவலையோடு குறிப்பிட்டிருந்தார்.

மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மூலம், பெருநகரங்களில் உள்ள அங்காடி வளாகங்களில் வேளாண் விளைபொருள்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு, ""பேக்'' செய்யப்பட்டு, எடை, தரம், விலை குறியீடுகளுடன் விற்கப்படுமானால் லாலு சுட்டிக்காட்டிய முரண்பாடு மறைந்துவிடும். இது மட்டும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறினால், இந்திய வேளாண்மைத்துறையில் ""மூன்றாவது புரட்சி'' ஏற்பட்டுவிடும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது கைக்கும் வாய்க்கும் எட்டுகிற நிலைமையில்தான் நமது உணவு தானிய உற்பத்தி இருந்தது. உணவு தானியத் தேவையில் தன்னிறைவு பெற்றவர்களாகக் கூட இல்லை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட ""பசுமைப் புரட்சி''யின் விளைவாக நிலைமை தலைகீழாக மாறியது. அதில் பங்கேற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் போன்றவர்கள் ""இரண்டாவது பசுமைப் புரட்சி'' இப்போது அவசியம் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

வறுமைக் கோட்டுக்குக்கீழே வாழும் ஏழைகளுக்காக இப்போது மீண்டும் கோதுமை, அரிசி போன்றவற்றை இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கிறோம்.

கிராமப்புறங்களில் ஏற்பட்ட இரண்டாவது புரட்சி, பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக நம்மை இடம் பெறச் செய்த ""வெண்மைப் புரட்சி''யாகும். அமுல் நிறுவனத்தின் தந்தையும் தலைசிறந்த நிர்வாகியுமான டாக்டர் வர்கீஸ் குரியனும், சிறந்த காந்தியவாதியும் கைதேர்ந்த கூட்டுறவு இயக்க நிபுணருமான டாக்டர் திரிபுவன்தாஸ் படேலும் இந்தப்புரட்சிக்கு முழுமுதல் காரணகர்த்தாக்கள். குஜராத்தில் மட்டும் எல்லா மாநிலங்களிலுமே பால் பண்ணைகள் பெருக இவர்களின் நடவடிக்கைகள் முன்னோடியாகத் திகழ்ந்தன.

பசுமைப்புரட்சி காலத்தில் உரிய நேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்ற இடுபொருள்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்தது. பாசனத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. வீரிய விதைகள் விநியோகிக்கப்பட்டன.

விவசாயிகள் சாகுபடி செய்யும் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது, சந்தையில் அந்த விலைக்குக் குறைவாக விற்கும் நிலைமை ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு நேரடி நெல் கொள்முதல் திட்டத்தை இந்திய உணவு கார்ப்பரேஷன் மூலம் அமல்படுத்தியது, நெல், கோதுமை, சர்க்கரை போன்றவற்றை போதிய அளவில் கையிருப்பில் வைத்துக் கொள்ள கிடங்கு வசதிகளும், அவற்றுக்கு ரயில் பாதை இணைப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.

இப்போது இந்திய வேளாண்மை பற்றிப் பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதுதான். பருத்தி சாகுபடியில் இறங்கியவர்களும், அதிக பொருள் செலவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி வயலுக்கு அடித்தவர்களும்தான் அதிகம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதைத் தடுக்க, முதலில் விவசாயிகளை அழைத்து அவர்களின் மனத்தளர்ச்சி, விரக்தி மனப்பான்மை நீங்க, நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேச வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து மிகுந்த நம்பிக்கையோடு இறக்குமதி செய்யப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளும், அதிக விலைக்கு வாங்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளும் பலன் தராமல் பருவமழை பொய்த்ததால் கடன் சுமை அதிகரித்து விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். அப்படி இறக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு தலா ஒரு லட்ச ரூபாயை உதவித்தொகையாகத் தருகிறது.

வறுமை தாளாமல் விவசாயக் கூலிகள் தவிக்கும்போது அவர்களுக்கு அரசின் உதவி உரிய முறையில் கிடைக்காமல் போவதால், நக்சல்களின் நெருப்புப் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டு நக்சல்களாக மாறுகின்றனர்.

தற்கொலைக்கு அடுத்தபடியாக இந்திய வேளாண்மையை மிகவும் பாதிக்கும் அம்சம் உற்பத்தித் திறன் ஆகும். நம்மைவிடக் குறைந்த சாகுபடி பரப்பைக் கொண்டுள்ள சீனா, நம்மைவிட அதிக அளவு தானிய விளைச்சலைத் தருகிறது.

நிலத்திலிருந்து விளைவது குறைவாக இருப்பது ஒருபகுதி என்றால், விளைந்த தானியங்களையும் காய்கறிகளையும் பழங்களையும் அறுவடை செய்து எடுத்து வரும்போது சேதாரப்படுத்துவதன் மூலம் 10 சதவீத உற்பத்தியை வீணாக்குகிறோம்.

எல்லா பருவகாலத்திலும் பூச்சி அரிக்காமல், பறவைகள், எலிகள் பாழ்படுத்தாமல் தானியங்களையும் இதர விளைபொருள்களையும் சேமித்து வைக்க கலன்கள், குதிர்கள், கிடங்குகள், குளிர்பதன வசதி இல்லாமல் 40 சதவீதம் வரை வேளாண் சாகுபடி வீணாகிறது.

ஓராண்டு சாகுபடி பற்றாக்குறையாக இருப்பதும் அடுத்த ஆண்டு உபரியாவதும் தொடர்கிறது. பற்றாக்குறையின்போது பணமே கிடைக்காமல் ஏழ்மையில் மூழ்க நேரிடுகிறது என்றால், உபரியின்போது கொள்முதல் விலை சரிந்து, போட்ட அசலைக்கூட எடுக்க முடியாமல் நஷ்டம் ஏற்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் மட்டுமே விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 60 சதவீத பங்கைப் பிடிக்கின்றனர்.

இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் விவசாயத்தில் நேரடியாக ஈடுபட்டு, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீத அளவுக்கு மட்டுமே சாகுபடி செய்கின்றனர்.

இந் நிலையில் பெரிய தொழில்நிறுவனங்கள் இத் தொழிலில் ஈடுபட்டால் நிலங்களை வளப்படுத்துவது, பாசன வசதி அளிப்பது ஆகியவை விரிவான அளவில் நடைபெறும். அடுத்து தரமான விதைகள், விலைகுறைந்த இயற்கை உரங்கள், நவீன சாகுபடி உத்தி ஆகியவற்றைப் பின்பற்ற முடியும்.

திசு வளர்ப்பு மூலம் செடிகளையும் கொடிகளையும் வளர்ப்பது, ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்துவது என்று வேளாண்மையில் லாப நோக்குடன் புதியவை புகுத்தப்படும். அடுத்தபடியாக விளைபொருள்களைச் சேதம் இன்றி அறுவடை செய்வதும் கிடங்குகளுக்கும் விற்பனை நிலையங்களுக்கும் கொண்டு செல்வது சாத்தியம்.

இடைத்தரகர் இன்றி, உற்பத்தியாளருக்கும் கணிசமான தொகை கிடைக்கும் நுகர்வோருக்கும் கட்டுப்படியாகும் விலையில் பண்டங்கள் கிடைக்கும். கூட்டுறவுத்துறை வலுப்பெறும். உற்பத்தி, விநியோகம், விற்பனை போன்றவை விவசாயிகளுக்குச் சாதகமாக மாறும்.

அதன் பிறகு தொழில் நிறுவனங்களின் தலையீட்டால் ஏற்படும் மூன்றாவது வேளாண்மைப் புரட்சியானது ""விவசாயியைச் சார்ந்த வேளாண்மை'' என்ற நிலைமையை மாற்றி, ""வேளாண்-வர்த்தகம் சார்ந்த வேளாண் தொழில்'' என்ற நிலைமைக்குக் கொண்டு செல்லும்.

மியூச்சுவல் பண்ட் முதலீடு இனி குறையுமா?

வரும் ஜூலை 1ம் தேதி முதல், மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, நிரந்தர கணக்கு எண் (PAN) குறிப்பிட வேண்டும். இதனால் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் பொது மக்கள் முதலீடு செய்வது பாதிக்கப்படலாம் என மியூச்சுவல் பண்ட் கம்பெனிகள் கலக்கம் அடைந்துள்ளன.

மியூச்சுவல் பண்ட் முதலீடு இந்தியாவில் சமீப காலமாகத்தான் அதிகம் பேருக்கு தெரியத் தொடங்கியுள்ளது. இத்திட்டங்களில் இந்தியர்கள் ரூ.4,10,000 கோடி முதலீடு செய்துள்ளனர்.
எனினும் இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் குவிந்துள்ள பணத்தை விட, அமெரிக்காவில் 100 மடங்கு அதிக பணம் புரள்கிறது.இந்நிலையில் சிறிய முதலீடுகளுக்கும் கூட PAN குறிப்பிடுவது கட்டாயம் என்று அறிவித்தால், அது பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக சிறிய நகரங்கள், கிராமப்புறங்களில் பாதிப்பு அதிகமாக இருக்குமாம். காரணம், அங்கு PAN எண் பற்றி போதிய விழிப்புணர்வு கிடையாது. நிறைய பேரிடம் PAN இருக்காது என்பதுதான்.இதுவரை இவற்றில் ரூ.50 ஆயிரத்துக்கு அதிகமாக முதலீடு செய்தால்தான், வருமான வரித் துறை தரும் நிரந்தர கணக்கு எண்ணை (PAN) குறிப்பிட வேண்டும் என விதி இருந்தது.

ஆனால் ஜூலை 1 முதல் இது மாறுகிறது. இனி, வெறும் 50 ரூபாய் முதலீடு செய்தால் கூட, PAN எண்ணை குறிப்பிட வேண்டியது கட்டாயமாகிறது. இதனால் மக்களின் முதலீடு குறையலாம் என கம்பெனிகள் கலக்கம் அடைந்துள்ளன.“பங்குச் சந்தையில் எல்லா பரிவர்த்தனைகளுக்கும் PAN கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. தற்போது அது மியூச்சுவல் பண்ட் திட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது” என இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கத் தலைவர் ஏ.பி. குரியன் தெரிவித்தார்.

இப்போது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் கையாளும் பணத்தில் சுமார் 30 சதவீதம் சிறு நகர மக்கள் முதலீடு செய்ததுதான். தொடர்ந்து, இந்த தொகை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் முறைக்கு (‘SIP’) நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அப்பன்திருப்பதி தரும் இய்ற்கை உரம்


விஞ்ஞான வளர்ச்சியால் செயற்கை உரங்கள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கை உரங்களை பதப்படுத்தி, பக்குவப்படுத்தி தயாரிப்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதனாலேயே செயற்கை உரங்களை நம்மூர் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இவற்றால் வயல்களுக்கும், பயிர்களுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை விவசாயிகள் தெரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.

இயற்கை உரத்தின் அவசியத்தை உணர்ந்துள்ள வெளிமாநிலத்தவர்கள் நம்மூர் கிராமப் பகுதிகளில் கிடைக்கும் பதப்படுத்திய மாட்டுச் சாணத்தை வாங்கிச் செல்கின்றனர்.மதுரை அழகர்கோவில் நெடுஞ்சாலையில் உள்ளது அப்பன்திருப்பதி. அப்பன்திருப்பதி அருகே உள்ள மாத்தூர் பகுதியில் சிலர் கூடாரம் அமைத்து தங்கி உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் உள்ள ஆயிரக்கணக்கான மாடுகளை அருகில் உள்ள வயல்வெளிகளில் கிடைகள் அமைக்கின்றனர்.

இதில் கிடைக்கும் மாடுகளின் சாணத்தை சேகரித்து எருவாக மாற்றுகின்றனர். இதனை வெயிலில் உலர வைத்து, பதப்படுத்தி பவுடராக்குகின்றனர். பின்னர் சில நாட்கள் அதனை மண்ணில் மூடி வைத்து, சாக்கு மூடைகளில் பேக்கிங் செய்து விற்பனைக்கு தயாராக்குகின்றனர். தோட்டங்களுக்கு சிறந்த உரமாக இருப்பதால் கேரளாவில் உள்ள டீ எஸ்டேட் உரிமையாளர்கள் லோடு கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். இதே போல் கர்நாடகா, ஆந்திராவிலிருந்தும் தொழிலதிபர்கள் மாத்தூர் வந்து இயற்கை உரங்களை டன் கணக்கில் வாங்கி செல்கின்றனர்.

தகவல் - தினமலர்

விரிவாகிறது "பாரமவுண்ட் ஏர்வேஸ்"



கடந்த 2005ல் மதுரையை சேர்ந்த கருமுத்து. தியாகராசன் அவர்களின் குழுமத்தினரால் துவக்கப்பட்ட பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனம் பிரேசிலிடமிருந்து 40 விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.8,200 கோடி.

புதிய எம்பரர் ரக விமானங்கள் 2008 முதல் 2011&க்குள் தயாராகி விடும். இப்போது இந்நிறுவனத்திற்கு 5 விமானங்கள் உள்ளன. நிறுவனத்தின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்காக வேறொரு விமான நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு மேற்குப் பகுதிகளுக்கு விமான சேவையை இயக்க முடிவு செய்துள்ளோம் என்றார் பாரமவுன்ட் நிர்வாக இயக்குநர் எம்.தியாகராஜன்.

இப்போது தென்னகப் பகுதிகளில் மட்டும் 26 சதவீத சந்தை பங்குடன் உலவும் இந்நிறுவனம் 2009 மத்தியில் மேற்கத்திய பகுதிகளில் குறிப்பாக மும்பையிலும் இதே அளவு சந்தை பங்கை கைப்பற்றவும் 2011&ல் அறுபது விமானங்களுடன் நாடு முழுவதும் விமான சேவையை இயக்கவும் திட்டமிட்டுள்ளது.

தமிழகம் வருகிறது 'NIKE' காலணி தொழிற்சாலை


காஞ்சிபுரம் அடுத்த செய்யாறு பகுதியில் ரூ.300 கோடி முதலீட்டில் சர்வதேச பிராண்டான "நைக்" காலணி தொழிற்சாலை அமைகிறது. இதை ஹாங்காங்கைச் சேர்ந்த குரோத் லிங்க் ஓவர்சீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் உற்பத்தி தொடங்கும். 15,000 பேருக்கு வேலை கிடைக்கும்.

தைவானைச் சேர்ந்த காலணி நிறுவனம் பெங் டாய் என்டர்பிரைஸ். இது உலகப் புகழ்பெற்ற "நைக்" தயாரிப்புகளைத் தயாரித்து சப்ளை செய்கிறது. அதன் துணை நிறுவனமாக ஹாங்காங்கைச் சேர்ந்த குரோத் லிங்க் ஓவர்சீஸ் செயல்படுகிறது. இது தமிழகத்தின் செய்யாறு பகுதியில் அமைய உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தனது காலணி தொழிற்சாலை அமைக்கவுள்ளது.

செய்யாறு சிப்காட் தொழிற் பூங்காவை ஒட்டி சுமார் 275 ஏக்கர் பரப்பில் தொழிற்சாலை அமைப்பதுடன், காலணி தயாரிப்புப் பொருட்களைச் சப்ளை செய்யும் நிறுவனங்களையும் அங்கு கொண்டு வர முயற்சி தொடங்கியுள்ளது. இதற்காக தனது சப்ளை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

எதிர்கால விரிவாக்கத் திட்டங்களுக்காக 225 ஏக்கர் கூடுதல் இடத்தை வாங்குவதற்காக தமிழக அரசுடன் கடந்த செப்டம்பர் மாதத்திலேயே குரோத் லிங் ஓவர்சீஸ் நிறுவனம் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. முழுவதும் ஏற்றுமதிக்கான காலணி தயாரிப்பை செய்யாறு தொழிற்சாலை மேற்கொள்ளும். அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் உற்பத்தி தொடங்கும். அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 10 லட்சம் வீதம் காலணி ஜோடிகள் தயாரிக்கப்படும்.

செய்யாறு தொழிற்சாலையில் முதல் 2 ஆண்டுகளில் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும். அடுத்த 3 ஆண்டுகளில் இது 15,000 ஆக உயரும். ஊழியர்களில் 80 சதவீதம் பேர் பெண்களாக இருப்பார்கள் என்று குரோத் லிங்க் ஓவர்சீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், தொழிற்சாலைகள் அதிகம் இல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய செய்யாறு பகுதி வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தானாக இடுப்பில் பொருந்தும் புது ரக பேண்ட்

திருப்பூரைச் சேர்ந்த ராயல் கிளாசிக் மில்ஸ் நிறுவனம், "கிளாசிக் போலோ' டிசர்ட்டுகளை வெளிநாடுக்ளுக்கு ஏற்றுமதி செய்து நல்ல வரவேற்பை பெற்றது. இது இந்தியாவிலேயே முதன்முறையாக சுருக்கம் இல்லாத உடலுக்கு ஏற்ற வகையில் தானாக இடுப்பில் பொருந்திக் கொள்ளும் பேண்ட் அறிமுகம் செய்துள்ளது.

ரெடிமேட் பேண்ட் வாங்கிய பிறகு, தனியாக மாற்றம் செய்து தைக்க வேண்டிய வேலை இனி இல்லை. இந்த பேண்ட் துணிகள் சீன நாட்டின் நவீன தொழில்நுட்பத்தில் சுருங்காத துணியாக, இஸ்திரி செய்ய தேவை இல்லாததாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பேண்ட் விலை ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாய் வரை விலையில் விற்பனை செய்யப்படும். இது தயாரிக்க பிரம்மாண்ட தொழிற்சாலை கோவை அருகே 11 கோடி ரூபாயில் ஒரு ஷிப்டிற்கு 800 பேண்ட் தயாரிக்கும் வசதியுடன் கிளாசிக் போலோ நிறுவியுள்ளது என்று ராயல் கிளாசிக் நிறுவன எக்சிகியூட்டிவ் டைரக்டர் ஆர். சிவராம் தெரிவித்தார்.

இதுவரை ரெடிமேட் பேண்ட் வாங்குபவர்களுக்கு பேண்டில் கால் உயரம் அதிகமாக இருந்தால் வெட்டி தைக்கப்படும். ஆனால் இடுப்பு சுற்றளவு சரி செய்ய முடியாது. இதனால் ரெடிமேட் பேண்ட் வாங்க யாரும் விரும்புவதில்லை.

கிளாசிக் போலோ ஆடைகள் தயாரிக்கும் ராயல் கிளாசிக் நிறுவனம் "ஆட்டோ பிட்' என்னும் தானாக இடுப்பில் பொருந்திக் கொள்ளும் டிரவுசர்களை தயாரிக்கிறது. இந்தியாவில் ரெடிமேட் பேண்ட் அணிபவர்கள் அதிகரிப்பதால் இந்த புதிய பேண்ட்களை அறிமுகம் செய்துள்ளது என்று எக்சிகியூட்டிவ் டைரக்டர் ஆர். சிவராம் தெரிவித்தார்.

உயர்ரக காட்டன் நூலில் புது ரக வாசிங் தொழில்நுட்பமான சீன நாட்டு "வெய்சி' தொழில்நுட்பத்துடன் சுருங்காத துணியில் இந்த பேண்ட் தயாரிக்கிறது. இதற்காக அதிக அழுத்தம் கொண்ட யந்திரம் வழியாக இந்த ஜவுளி தயாரிப்பு நூல் செலுத்தப் படுகிறது. இதனால் துணி சுருங்காது.

திருப்பூரை சேர்ந்த ராயல் கிளாசிக் குரூப் 225 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக 1991ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. டெக்ஸ்டைல்ஸ், ஏற்றுமதி ஆடைகள் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இதில் 110 கோடி ரூபாயில் நூற்பாலை முதல், துணிகள் நெசவு, ரெடிமேட் ஆடை தயாரிப்பு யூனிட்டுகளை நிறுவி உள்ளது.

கோவை அருகே ரெடிமேட் பேண்ட் தொழிற்சாலை

கோவை அருகே "வாகராய்' பகுதியில் 6 ஆயிரம் சதுர அடியில் 4 கோடி ரூபாயில், ஒரு ஷிப்டிற்கு 120 பேருடன் 800 ஜோடி பேண்ட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ராயல் கிளாசிக் நிறுவனம் நிறுவி உள்ளது. இந்த தொழிற்சாலையை 7ந்தேதி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர் சிங் வகேலா திறந்து வைக்கிறார். இதையொட்டி ஒரு "பேஷன் ஷோ' திருப்பூரில் நடைபெறுகிறது என்றும் சிவராம் தெரிவித்தார்.

ராயல் கிளாசிக் நிறுவனம் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா நாடுகளில் ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் 36 ஷோரூம்கள், 1750 ஜவுளி ஷோரூம்களில் கிளாசிக் போலோ ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது.

கிளாசிக் போலோ ஆடவருக்கு ரெடிமேட் ஆடைகள், "ஸ்மாஷ்' உள்ளாடைகள், ஸ்போர்ட்ஸ் ஆடைகள் தயாரிக்கிறது. ஆண்டுதோறும் பல்வேறு புதிய டிசைன்களில் ஆடைகள் அறிமுகம் செய்கிறது என்றும் சிவராம் தெரிவித்தார்.

ESOP-னா என்ன?

1.What is ESOP ?
ESOP is short form of Employees Stock Option Plan. Under this plan, companies provides employees a plan by which the employees get an option to acquire shares of their employer company over a period of time at a reduced price or nil price. Therefore ESOP is primarily a kind of incentive to hold the employees to the company's fold .Therefore, question of taxing this perquisite and capital gains at the time of sale of shares received by the employees arise.

2.What are the new taxation scheme of ESOP?
The new scheme of taxation of Employees Stock Option Plan initiated by Finance Bill passed on 11th May 2007 and effective from 1/4/2007 is as follows

No taxation of perquisite in hands of employees.
Employer to pay Fringe Benefit Tax at the time vesting of shares in Employees.
Employee to pay capital gains tax at the time of sale of shares received under ESOP.

3.Fringe Benefit Tax To Be Paid By Employer
Section 115WB1(d) has been inserted in the I T Act to bring ESOP under FBT . The said provision and explanation therein made it explicitly clear that ESOP is under FBT

any specified security or sweat equity shares allotted or transferred, directly or indirectly, by the employer free of cost or at concessional rate to his employees (including former employee or employees).

4. How the value for fringe benefit on ESOP computed?
Section 115WC(1)(ba) gives the method of valuation of ESOP for the purpose of imposing fringe benefit tax. The said provision under 115WC(1)(ba) is as under

the fair market value of the specified security or sweat equity shares referred to in clause (d) of sub-section (1) of section 115WB, on the date on which the option vests with the employee as reduced by the amount actually paid by, or recovered from, the employee in respect of such security or shares.

What the aforesaid provision states in simple terms is

Fair market value (FMV) of shares has to be taken for valuation purpose.
The valuation date for FMV is the date on which the shares are vested in employee.
The value of fringe benefit shall be FMV reduced by amount paid by employee.
The FBT will be charged @ 33.99%

5. How the Fair market value is determined?
As per explanation, Central Board of Direct Taxes will come out with method of Fair Market Valuation . CBDT has not come out yet.But one should expect that FMV shall be almost equal to average rate on either NSE or BSE on the date of valuation.

6.What is this vesting of shares?
Under ESOP , an employee is given an option of buying the share of companies at a reduced priced. The Option is a Right but no obligation. Therefore , date of vesting of shares means the date when the company allots shares to employee.

7. What happens when employee sells the shares received under ESOP?
The gains shall arise on sale of those shares. The value of capital gains shall be computed by reducing the cost of acquiring such ESOP shares from the sale consideration. For determining the cost of acquisition section 49(2AB ) has been introduced from 1/4/2007 so as to provide that fair market value taken for computing the FBT by the employer shall be taken as COST of acquisition of shares. The exact wordings of section 49(2AB) is as under:

Where the capital gain arises from the transfer of specified security or sweat equity shares, the cost of acquisition of such security or shares shall be the fair market value which has been taken into account while computing the value of fringe benefits under clause (ba) of sub-section (1) of section 115WC.




Let us take an example.
A company announces an ESOP plan under which company will allot 500 shares of company to certain employees at a price of Rs 100. Those eligible employees will have option of getting allotment of 100 shares on 1st day of October every year starting from 1/4/2007 for next five years.Let us say, Mr X an employee fills out the ESOP application form on 1.7.2007 for allotment of shares . He is allotted 100 shares on 1/10/2007 . The market value on 1/10/2007 , (vesting day) is RS 500. These 100 shares , let us think , hypothetically, sold by the employee on 31/3/2009 at a price of RS 1200. Then

FBT to be paid by the employer company will be 33.99% on (Rs500-Rs 100)x 100 nos=Rs 16000.Since the vesting date is 1/10/2007 ,FBT will be paid in the year of vesting i.e FY 2007-08 .

There will be long term capital gain on 31/3/2009 since the the shares allotted on 1/10/2007 are hold for more than one year. The long term capital gains shall be computed as under

Sale consideration RS 1200 x 100 = Rs 1,20,000
Less

Cost of acquisition is FMV for FBT purpose i.e Rs 500x 100 =Rs 50,000
Long Term Capital Gains = Rs 70,000

Please note

for simplicity , indexation of cost has not been done otherwise indexation benefit shall be given in case of long term gains and that will substantially reduce the tax liability.

The tax on sale of shares may be nil if aforesaid shares are sold through stock exchange by paying securities transaction tax because long term capital gains on shares are exempt from tax.

ஏற்றுமதியாகும் மண்புழு உரம்


மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த கட்டக்குளத்தை சேர்ந்தவர் கார்த்திக்குமார். தோட்டக்கலையில் எம்.எஸ்சி., படித்த இவர், படிப்பு முடிந்ததும் டாடா கம்பெனிக்கு மாலத் தீவில் ஒரு தோட்டம் அமைத்துக் கொடுக்கும் பணியை ஏற்றார். ஓய்வு நேரத்தில் ஏற்றுமதி குறித்த பயிற்சியும் பெற்றார். அதன்பின் இந்தியா திரும்பிய இவர், இங்கிருந்து மாலத்
தீவிற்கு செடிகள் மற்றும் உரம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தார்.

ஒரு ஆண்டிற்கு முன் மதுரையில் மத்திய அரசின் நிதி உதவி பெற்று செயல்படும் "வேப்ஸ்' நிறுவனத்தில் மண்புழு உரம் தயாரிக்கும் தொழில் நுட்பம் குறித்து பயிற்சி பெற்றார். இப்பயிற்சி சான்றிதழை கொண்டு வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்று மண்புழு உரப் பண்ணையை சொந்தமாக துவக்கினார். இங்கு தயாராகும் மண்புழு உரத்தை மாலத்தீவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த தொழில் மூலம் கார்த்திக்குமாருக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

"மண்புழு உரம் தயாரிக்க அமைக்கப்படும் "பெட்' அகலம் ஒரு மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். இடவசதிக்கு ஏற்ப நீளம் இருக்கலாம். அரை அடி ஆழத்திற்கு குழி வெட்டி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். அந்த குழியில் தென்னை நார் கழிவை கொட்டி, அதன் மீது "மொலாசஸ்' கழிவை துõவ வேண்டும். அடுத்ததாக, நன்கு காய்ந்த எரு பொடியை பரப்பி அதன் மீது ஈரமான சாணத்தை கொட்டி அதில் மண் புழுக்களை விடவேண்டும். சாணத்தை உணவாக எடுத்துக் கொண்ட மண்புழுக்கள் வெளியேற்றும் கழிவுகள் உரமாக கிடைக்கும்' என்கிறார் கார்த்திக்குமார்.