10 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி

சென்ற வெள்ளிக்கிழமையன்று மேலும் 10 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நடைமுறைகளை எளிமையாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ளும் வகையில் மத்திய அமைச்சரவை சில கொள்கைகளை வகுத்த பின்னர் முதன் முறையாக 10 சிறப்பு பொருளாதார மண்ட லங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாட்டா கன்சல்டன்சி
இந்த 10 சிறப்பு பொருளாதார மண்டலங்களுள், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் மேற்கு வங்காளத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலமும், அதானி குழுமம் குஜராத் மாநிலம் முந்த்ராவில் 1,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்க திட்டமிட்டுள்ள பன்முக பயன்பாட்டு சிறப்பு பொருளாதார மண்டலமும் அடங்கும்.

சலோனி பிசினஸ் பார்க் நிறுவனம் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள உயிரி தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கும், தமிழகத்தில் ரகின்டோ கோவை டவுன்ஷிப் நிறுவனத்தால் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கும், மால்வா ஐ.டி. பார்க் நிறுவனம் மத்திய பிரதேசத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கும், தமிழ்நாட்டில் ஜாஃப்சா சென்னை பிசினஸ் பார்க்ஸ் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
எனினும் டீ.எல்.எஃப். மற்றும் ïனிடெக் ஆகிய நிறுவனங்களின் சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்விரு நிறு வனங்களும் தேவையான நிலத்தை கைவசம் வைத்திராததால், தற்போது அனுமதி அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

பிரிவிலேஜ் பவர் அண்டு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மகாராஷ்டிர மாநிலத்தில் பன்முக பயன்பாட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத் தின் திட்டங்களுக்கு கொள்கையளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் வென்ச்சர்ஸ் நிறுவனம் மின்னணு மற்றும் மின்சார உபகரணங்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க உள்ளது. செங்காடு புராஜக்ட்ஸ் நிறுவனம் பன்முக பயன்பாட்டு சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள இவ்விரு சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும் கொள்கையளவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

-இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

பணவீக்க விகிதம் 3.07 சதவீதமாக சரிவு

நாட்டின் பணவீக்க விகிதம் அக்டோபர் 6-ந் தேதி�டன் நிறைவடைந்த வாரத்தில் 0.19 சதவீதம் குறைந்து 3.07 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஐந்து ஆ�டுகளில் மிகவும் குறைந்த அளவாகும். நாட்டின் பணவீக்க விகிதம் இதற்கும் முந்தைய வாரத்தில் 3.26 சதவீதமாக இருந்தது.

கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ள�பட்ட வாரத்தில், பழங்கள், காய்கறிகள், முட்டை, நவதானியங்கள், மீன் மற்றும் தயாரி�பு பொருள்களின் விலை குறைந்து காண�பட்டது. அதேசமயம், விமான எரிபொருள் விலை அதிகரித்து இருந்தது.

பணவீக்க விகிதம், பாரத ரிசர்வ் வங்கியின் நட�பு நிதி ஆ�டுக்கான மதி�பீட்டு அளவான 5 சதவீதத்திற்கு மிகவும் குறைவாக உள்ளது என்பது குறி�பிடத்தக்கது.

நாட்டின் பணவீக்க விகிதம் சென்ற ஆ�டின் இதே காலத்தில் 5.36 சதவீதம் என்ற அளவில் மிகவும் உயர்ந்து இருந்தது.

தரவு - இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு/தினதந்தி