மரம் வளர்க்க தயாரா?

தமிழக வனத்துறை சார்பில் தனியார் நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டம் வரும் மழைக்காலத்தில்(செப்டம்பர் முதல்) நடைமுறைப் படுத்தப்பட இருக்கிறது.அனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பலன்பெறும் வகையில் இலவசமாக மரக்கன்றுகளை வனத்துறை வழங்க இருக்கிறது.

பெருகிவரும் புவி வெப்பத்தினை தடுத்து,நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்தும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் தரிசு நிலங்கள், விளைநிலங்களின் ஓரமாக மரங்களை வளர்க்கலாம். இதற்காக தனிநபருக்கு ரூபாய் 35 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த தொகை பணமாக தரப்படமாட்டாது. மரக்கன்றுகள்,குழியெடுத்தல், நடவு செய்தல் போன்றவைக்காக செலவிடப்படும். பயன் பெற நினைக்கும் விவசாயிகள் "நான் மரக்கன்றுகளை முறையாக பராமரித்து வளர்ப்பேன்" என்ற உறுதிமொழி பத்திரத்தில் கையெழுது போட்டு கொடுத்தால் போதும்.

தேக்கு, வேம்பு, சவுக்கு,பீநாரி மற்றும் இலவம்பஞ்சு மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. விளை நிலங்களில் மண்ணின் ஈரம் நிலைநிறுத்தப்படுவதுடன், பத்தாண்டுகளில் இந்த மரங்களின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் 2007-08-ம் ஆண்டுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட வனத்துறை(சமூக காடுகள்)அலுவலகத்தை அணுகலாம்.

மதுரை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வாடிப்பட்டி, திருமங்கலம், மேலூர் மற்றும் தேனி மாவட்டத்தில் இத்திட்டம் செயல்பட தொடங்கிவிட்டது. மதுரைமாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி:0452-2562912. அலைபேசி 98654-83066

தேனி மாவட்ட விவசாயிகள் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி 98659-21557


-தகவல் பசுமைவிகடன்

0 comments: