1 யூனிட்டில் இருந்து 10 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்கிறார் தேனி மெக்கானிக்



குறைந்த செலவில் அதிக அளவு மின் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை தேனியைச் சேர்ந்த சல்லடை தயாரிப்பாளர் கண்டுபிடித்துள்ளார்.

தேனி சிட்கோ தொழிற்பேட்டையில் ராதா ஜெனரல் இன்டஸ்ட்ரீஸ் எனும் பெயரில் அரைவை மில்களுக்கு தேவையான சல்லடை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்துபவர் வரதராஜன் (67).

இவர் மரபு சாரா எரிசக்தி மூலம் ஒரு எச்.பி. (குதிரை சக்தி) மின் சக்தியை கொண்டு 10 எச்.பி. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். 12 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து பல லட்ச ரூபாய் செலவழித்து தற்போது 1 யூனிட் மின்சாரம் மூலம் 10 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து வரதராஜன் மேலும் கூறியதாவது:

இதற்கான பார்முலாவை பயன்படுத்தி நாட்டுக்கு தேவையான மின்சாரத்தை மிக எளிதில் உற்பத்தி செய்து விடலாம். இதன்மூலம் வாகனங்கள், கப்பல் ஆகியவற்றை இயக்க முடியும், இதற்கு பெட்ரோலோ, டீசலோ தேவையில்லை. வாகனங்கள் இயக்கப்பட்டால் சத்தமோ, புகையோ ஏற்படாது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.

என்னுடைய பார்முலா மூலம் ஒரு மடங்கு குதிரை சக்தி திறன் மின்சாரத்தை செலுத்தி 10 மடங்கு மின்சாரம் பெற முடியும். இதற்கான காப்புரிமையைப் பெற பதிவு செய்ய உள்ளேன். விற்பனை நோக்கில் இயந்திரம் கண்டுபிடிக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்து எனது கண்டுபிடிப்பை காட்டி விளக்குவேன்.

இவ்வாறு வரதராஜன் கூறினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது - ஒய்.வி.ரெட்டி

உலக நாடுகளின் பொருளாதார நிலையில் நிலையற்ற தன்மை ஏற்பட்டாலும், இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான அளவில் வளர்ச்சி காணும். நடப்பு 2007-08-ஆம் ஆண்டில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜி.டீ.பி) 8.5 சதவீத அளவிற்கு இருக்கும். அதேபோன்று நாட்டின் பணவீக்க விகிதம் 5 சதவீத அளவிற்குள் கட்டுக்குள் இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கியின் (ஆர்.பீ.ஐ) கவர்னர் ஒய்.வி.ரெட்டி தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி

சென்னையில் கிரேட் லேக்ஸ் நிர்வாக இயல் பயிலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ஒய்.வி.ரெட்டி மேலும் கூறும்போது, "உலகில் பல நாடுகளின் பொருளாதாரத்தில் அதிக ஏற்ற, இறக்கம் காணப் படுகிறது. இருப்பினும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும், உள்நாட்டு கடன் சந்தை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாக உள்ளது. பாரத ரிசர்வ் வங்கி, சர்வதேச பொருளாதார நடவடிக்கை களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போதைய நிலையில், உலக பொருளாதாரத்திற்கு வழி காட்டும் நிலையில் இந்திய பொருளாதாரம் உள்ளது. இருப்பினும், உலக பொருளாதார நடவடிக்கைகளையும், அவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் நாம் கவனிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

முதலீடுகள்

இதர நாடுகளில் 40 சதவீத அளவிற்கு முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் முதலீடு 30 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. இந்நிலையிலும், இதர நாடுகளையும் விஞ்சிடும் அளவில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8 முதல் 9 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, முதலீடுகள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும், மத்திய அரசு, நாட்டின் பணவீக்க விகிதத்தை 3 சதவீத அளவிற்கு வைத்துள்ளது. இது, இதர சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதாகும்.

பணவீக்க விகிதம்

பாரத ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களின்படி, மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்க விகிதம் 2007-ஆம் ஆண்டு ஏப்ரலில் 6 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. மத்திய அரசும், பாரத ரிசர்வ் வங்கியும் மேற்கொண்ட நடவடிக்கைகளால் இது, 2007-ஆம் ஆண்டு ஜுலை 14-ந் தேதியன்று 4.4 சதவீதமாக குறைந்திருந்தது. டிசம்பர் 1-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இது 3.75 சதவீதமாக உள்ளது.

நாட்டில் பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் உணவு தானியங்களின் விலையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகரிப்பதற்கு மேற்கண்ட இரண்டு பொருள்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என ரெட்டி குறிப்பிட்டார்.

வேளாண் துறை

அவர் மேலும் கூறும்போது, "பணம் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. பல்வேறு துறைகளின் வளர்ச்சியை பொறுத்தே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமைகிறது. உள்நாட்டிற்குள் வரும் முதலீடுகள் மிகவும் அதிகரித்து வருகிறது. அடிப்படை கட்டுமானம், மருத்துவம், கல்வி மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. இவை, நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய அம்சமாக திகழ்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வேளாண் துறையின் பங்களிப்பு 20 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவீதத்தினர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். எனவே, வேளாண் துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது இன்றியமையாததாகும்" என்று தெரிவித்தார்.

நிதி உதவி

இந்தியா மற்றும் சீனாவில் பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டிற்கும் மேல் வந்துள்ளனர். வேளாண் துறையில், அளப்பிற்கும், தேவைக்கும் இடையே உள்ள இடைவெளி நாட்டின் பொருளாதாரத்திற்கு தடைக்கல்லாக உள்ளது. எனவே, உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது. இதனை கருத்தில் கொன்டு, கடந்த ஒரு சில மாதங்களாக வேளாண் துறைக்கு வழங்கப்படும் கடன் களின் அளவு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய மேம்பாட்டு கவுன்சில், எதிர்கால உணவு பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது என ரெட்டி மேலும் தெரிவித்தார்.

-இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு,சென்னை
தரவு - தினதந்தி

மானியங்களை ரத்து செய்ய பிரதமர் யோசனை?

கடந்த ஒரு ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி வரை மானியமாக வழங்கப்பட்டும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர் மன்மோகன்சிங், பலன் கிடைக்காத மானியங்களை ரத்து செய்யலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள பொருளாதார வளர்ச்சி மையத்தின் பொன்விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது-

மானியம் ரத்து?

"மக்கள் இடையே ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, ஏழைகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் மானியம் வழங்கி வருகிறோம். நடப்பு நிதியாண்டில் இந்த மானியம் ரூ.1 லட்சம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், இப்படி மானியம் வழங்குவதன் மூலம் நாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை.

மானியங்கள் ஏழைகளை சென்று அடையவில்லை என்றால், மானியம் வழங்குவதன் உண்மையான நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே, எதிர்பார்க்கும் பலன் கிடைக்காத மானியங்களை ரத்து செய்வது பற்றி பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

புதிய கொள்கை

நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு உள்ள கிராம மக்களுக்கு விவசாயத்துறையினால் மட்டும் வேலைவாய்ப்பு வழங்க முடியாது. எனவே விவசாயம் சாராத துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கொள்கைகளை வகுப்பது அவசியமாகும். கிராமங்கள்- நகரங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையே வளர்ச்சி விகிதத்தில் இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நாட்டின் வளர்ச்சி விகிதத்தை நிலையாக வைத்திருக்க முதலீடு மற்றும் சேமிப்பு விகிதங்களை அதிகரிக்கவேண்டும். இன்றைய சூழ்நிலையில் நாட்டுக்கு தேவை விவசாயமா? தொழில் துறையா? என்ற விவாதம் அல்ல. விவசாயம், தொழில் மற்றும் கிராமம், நகரம், நாடு என ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான புதிய கொள்கை அவசியம்.''

இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

தரவு - தினதந்தி

விரைவில் வருகிறது "ரிலையன்ஸ் வெல்னஸ்'

சுத்தமான சுகாதாரமான வாழ்விற்கு உத்தரவாதம் தரும் பல சிறப்பான பொருட்கள் எங்கே, என்ன விலையில் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியாமல் திணறிக் கொண்டு இருந்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் உலகப்புகழ் ரிலையன்ஸ் நிறுவனம் புதுமையான "ரிலையன்ஸ் வெல்னஸ்' என்ற ஷோரூமை இந்தியா முழுவதும் 31 நகரங்களில் திறக்க உள்ளது.

இதில் வைட்டமின் சத்து மாத்திரைகள் முதல் உயர்தர புரத சத்து உணவுகள் வரை, நவநாகரீக பெண்களுக்கான ஆயுர்வேத அழகு பொருட்கள் முதல் கலர் கலரான மூக்கு கண்ணாடிகள் வரை அனைத்தும் கிடைக்கும்.

"கனவிலும் நினைத்து பார்க்க முடியாதவற்றையும் நினைத்துப் பார்; அதை அமுலாக்க வியர்வை சிந்த வேலை செய்; அந்தகனவு மெய்ப்படும்'' இது ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் உபதேசமாகும். அந்த வழியில் திருபாய் அம்பானியின் அடிச்சுவட்டில் அவரது மூத்த மகன் மூகேஷ் அம்பானி பொது மக்களின் அன்றாட வாழ்வில் நேரடியாக பயன்படும் விதத்தில் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் "ரிலையன்ஸ் ரீடைல்' நிறுவனம் துவக்கி முக்கிய நகரங்களில் ரிலையன்ஸ் பிரஷ் கடைகளை திறந்தார். அங்கு வீட்டு உபயோக மளிகை பொருட்கள் தரமான தரத்தில் நியாயமான விலையில் விற்பனை செய்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

அதன் வெற்றி மகத்தான ஒன்றாக அமையவே மின்சார, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்ய டெல்லியில் பிரத்யேக மையம் ஒன்றை நிறுவினார்.

பல பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஸ்பென்சர்ஸ் போன்ற பழமையான நிறுவனங்கள் நடத்தி வந்த "ஷாப்பிங் மால்கள்' பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தபோதிலும் அவை முழுமையாக இல்லாதிருப்பதை கண்டு உலகப்புகழ் ஷாப்பிங் மால்களுக்கு சவால் விடும் வகையில் மிகப் பிரம்மாண்டமான "ரிலையன்ஸ் ஹைப்பர் மார்ட்' ஷாப்பிங் உலகை ஆமதாபாத்தில் நிறுவினார்.

இதுபோன்ற பெரிய ஷாப்பிங் கடைகளுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பு மற்றும் குறை நிறைகளை கேட்டறிந்த பின் சுகாதார வாழ்விற்கு உறுதி தரும் பல பொருட்கள் வெவ்வேறு இடங்களில் மட்டுமே கிடைப்பதை கண்டு மக்களுக்கு உதவிடும் வகையில் அனைத்து மருத்துவ நலன்கள் கொண்ட பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்க பிரத்யேகமாக ஷோரூம் ஒன்றை நிறுவ திட்டமிட்டார்.

டாக்டர் சீட்டு மருந்து விற்பனை இல்லை
அந்த கனவு நிறைவேற மேற்கொண்ட முயற்சிகள் இன்று வெற்றி பெற்று விட்டது. இந்த வரிசையில் முதல் கடையை சுமார் 15,000 சதுர அடியில் ஐதராபாத்தில் "ரிலையன்ஸ் வெல்னஸ்' என்ற பெயரில் துவக்கினார்.

இந்த கடையின் சிறப்பு என்னவென்றால், இங்கு மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ குணம் கொண்ட பல்வேறு எண்ணைகள், களிம்புகள், உணவு பதார்த்தங்கள், போஷாக்கு மாவுகள், ஜூஸ் வகைகள், ஊக்க சத்து பானங்கள், விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேக உணவு மற்றும் பான வகைகள், மருந்து மாத்திரைகள் என பல்வேறு பொருட்கள் இங்கு விற்பனையில் உள்ளது. மருந்து பொருட்கள் விற்பனையில் இருந்தாலும், டாக்டர்கள் தரும் மருந்து சீட்டு கொண்டு சென்று வாங்கப்படும் மருந்துகள் இங்கு விற்பனையில் இல்லை.

இந்த கடையில் குறிப்பிட்ட நேரத்தில் வல்லுநர்கள் வந்து பொது மக்களிடம் உரையாடி அவர்களின் பல சந்தேகங்களை தீர்த்து வைப்பார்கள்.

இலவச கண் பரிசோதனை
கண் பரிசோதனை மையமும், விதவிதமான கண்ணாடிகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு கம்ப்யூட்டர் மூலம் கண் பரிசோதனை இலவசமாகவும் செய்யப்பட்டு, எந்தவித கண்ணாடி வேண்டுமோ அதை இங்கேயே வாங்கிக் கொள்ளலாம் என்று இந்நிறுவன தலைமை செயல் இயக்குனர் மற்றும் பிரசிடெண்ட் நினு கன்னா தெரிவித்தார்.

6 மாதத்தில் சென்னையில் அண்ணாநகரில் திறக்கப்படும்
முதல் கடையை வெற்றிகரமாக விற்பனைக்கு திறக்கப்பட்ட பின் பத்திரிகை யாளர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில், இன்னும் 6 மாதத்தில் இதுபோன்ற கடையை சென்னையிலும் திறக்க இருப்பதாக தெரிவித்தார்.

அண்ணா நகர் அருகாமையில் கட்டப்படும் இந்த கடை உலக தரத்தில் மக்களுக்கு வேண்டிய பொருட்கள் எங்கே உள்ளது என்பதை கண்டறிந்து எடுத்துக் கொள்ளும் வகையில் அமைத்து வருகிறார்கள்.

3 ஆண்டுகளில் 31 நகரங்களில் 1300 மருந்து ஷோரூம்கள்
இதுபோன்ற "வெல்னஸ்' கடைகள் இந்தியா முழுவதும் 31 நகரங்களில் 1300 கடைகளை அடுத்த மூன்று ஆண்டுகளில் துவக்க இருப்பதாக தெரிவித்தார்.

எங்கும், எதிலும் பிரம்மாண்டம் என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் நிறுவனம், பொது மக்களின் சுகாதார வாழ்விற்கு அச்சாணியாக திகழ இந்த கடைகளை உலகில் யாரும் செய்யாத வகையில் வடிவமைத்து நிர்மாணிக்க உள்ளது.

சிறுவர், சிறுமிகளை கவரும் நோக்குடன் இக்கடையில் பல வகையான ஸ்கிப்பிங் கயிறுகள், இனிப்பு பதார்த்தங்கள், பொம்மைகளும் விற்பனைக்கு உள்ளது. இக்கடையின் இன்னொரு சிறப்பு மலிவு விலையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

விலையில் தள்ளுபடி ரிலையன்ஸ் சிறப்பு
குளுகுளு வசதி, நிபுணர்களின் ஆலோசனை எல்லாம் தரும் அதே நேரத்தில் அவை இலவசம் என்று சொல்லி விட்டு விற்பனை செய்யும் பொருட்களை அதிக விலையில் விற்பார்களோ என்று விலை பட்டியலை பார்த்தால், இன்ப அதிர்ச்சி தரும். அனைத்து பொருட்களும் எம்ஆர்பி விலையிலோ அல்லது விசேஷ தள்ளுபடி விலையிலே தான் விற்கப்படுகிறது.

கரும்பு தின்ன கூலி தரும் ரிலையன்ஸ்
தரமான பொருட்களை நியாய விலையில் மிக நவநாகரீக சூழலில் வாங்கி மகிழலாம். அவை பல நேரங்களில் குறைந்த விலையிலும் கிடைக்கிறது. "கரும்பு தின்ன கூலியா?' என்று கேட்டபடி அந்த கடையை நோக்கி இல்லத்தரசிகள் படை எடுக்காமலா போய் விடுவார்கள்?

மக்களுக்காக உயர்தரம், மலிவு விலையில் என்ற கொள்கை அடிப்படையில் இக்கடைகளை நிறுவி வரும் முகேஷ் அம்பானி நுகர்வோரின் கனவையும், நினைவாக்கி விட்டார் என்பது உண்மையே.

உடல் எடையை குறைக்க கூட்ட ஆலோசனை

"ரிலையன்ஸ் வெல்னஸ்' உடல் அழகு, ஆரோக்கியம் போன்ற பிரச்சினைகளுக்கு தேவையான பல்வேறு பொருட்கள், சாதனங்களை ஒரு இடத்தில் கொண்டுள்ளது. உலகப்புகழ் மற்றும் இந்திய புகழ் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை, சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருந்துகளும் கிடைக்கும்.

உடல் எடை குறைந்தவர்களுக்கு உடல் எடையை அதிகரிக்க சத்துணவு இங்கு கிடைக்கும். உடல் எடையை குறைப்பவர் களுக்கு ஆரோச்கிய ஆலோசனைகளுடன் "டயட்' உணவு, மாத்திரைகள் உண்டு. உடல் எடை குறைக்க உடற்பயிற்சி சாதனங்களும் விற்பனைக்கு உண்டு.

விளையாட்டு வீரர்கள், உடல் அழகு கொண்டவர்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி சாதனங்கள் இங்கு உண்டு.

அழகு பொருள், மூக்கு கண்ணாடி
இத்தாலிய உணவு வகையான தால்கோ "எச்'23' புளரன்ட் கிங்டம், சர்கோ பார்மா, நியூட்டிரிசன், நியூட்ரோ, ஜீரோ, மஜில்டெக், விளையாட்டு சத்துணவு போன்றவை பல்வேறு ரகங்களில் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியம், அழகு, மூக்கு, கண்ணாடி, மருந்துகள் போன்றவைகளும் கிடைக்கும். வழக்கமான மருந்துகளுக்கு மாற்று எளிமையான மருந்துகளும் இங்கு உண்டு.

ரிலையன்ஸ் வெல்னஸ் ஸ்டோர் வாடிக்கையாளர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்குகிறது. இது டாக்டர் எழுதும் மருந்து சாப்பிட ஆலோசனைகளை சொல்லி இருப்பார். ஒரு மாதம் மருந்து வாங்கி விட்டால், அடுத்த மாதம் மருந்து வாங்கலையா? என்று நினைவூட்டும் வசதியை ரிலையன்ஸ் வெல்னஸ் மார்ட் வழங்கும்.

உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வுகள், கருத்தரங்குகள், ஆலோசனை முகாம், மருத்துவ முகாம் போன்றவை நடத்தப்படும்.

தரவு- மக்கள்குரல்

10 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி

சென்ற வெள்ளிக்கிழமையன்று மேலும் 10 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான நடைமுறைகளை எளிமையாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ளும் வகையில் மத்திய அமைச்சரவை சில கொள்கைகளை வகுத்த பின்னர் முதன் முறையாக 10 சிறப்பு பொருளாதார மண்ட லங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாட்டா கன்சல்டன்சி
இந்த 10 சிறப்பு பொருளாதார மண்டலங்களுள், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் மேற்கு வங்காளத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலமும், அதானி குழுமம் குஜராத் மாநிலம் முந்த்ராவில் 1,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்க திட்டமிட்டுள்ள பன்முக பயன்பாட்டு சிறப்பு பொருளாதார மண்டலமும் அடங்கும்.

சலோனி பிசினஸ் பார்க் நிறுவனம் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள உயிரி தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கும், தமிழகத்தில் ரகின்டோ கோவை டவுன்ஷிப் நிறுவனத்தால் அமைக்கப்பட உள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கும், மால்வா ஐ.டி. பார்க் நிறுவனம் மத்திய பிரதேசத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கும், தமிழ்நாட்டில் ஜாஃப்சா சென்னை பிசினஸ் பார்க்ஸ் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
எனினும் டீ.எல்.எஃப். மற்றும் ïனிடெக் ஆகிய நிறுவனங்களின் சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்விரு நிறு வனங்களும் தேவையான நிலத்தை கைவசம் வைத்திராததால், தற்போது அனுமதி அளிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

பிரிவிலேஜ் பவர் அண்டு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மகாராஷ்டிர மாநிலத்தில் பன்முக பயன்பாட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத் தின் திட்டங்களுக்கு கொள்கையளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் வென்ச்சர்ஸ் நிறுவனம் மின்னணு மற்றும் மின்சார உபகரணங்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க உள்ளது. செங்காடு புராஜக்ட்ஸ் நிறுவனம் பன்முக பயன்பாட்டு சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள இவ்விரு சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும் கொள்கையளவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

-இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

பணவீக்க விகிதம் 3.07 சதவீதமாக சரிவு

நாட்டின் பணவீக்க விகிதம் அக்டோபர் 6-ந் தேதி�டன் நிறைவடைந்த வாரத்தில் 0.19 சதவீதம் குறைந்து 3.07 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஐந்து ஆ�டுகளில் மிகவும் குறைந்த அளவாகும். நாட்டின் பணவீக்க விகிதம் இதற்கும் முந்தைய வாரத்தில் 3.26 சதவீதமாக இருந்தது.

கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ள�பட்ட வாரத்தில், பழங்கள், காய்கறிகள், முட்டை, நவதானியங்கள், மீன் மற்றும் தயாரி�பு பொருள்களின் விலை குறைந்து காண�பட்டது. அதேசமயம், விமான எரிபொருள் விலை அதிகரித்து இருந்தது.

பணவீக்க விகிதம், பாரத ரிசர்வ் வங்கியின் நட�பு நிதி ஆ�டுக்கான மதி�பீட்டு அளவான 5 சதவீதத்திற்கு மிகவும் குறைவாக உள்ளது என்பது குறி�பிடத்தக்கது.

நாட்டின் பணவீக்க விகிதம் சென்ற ஆ�டின் இதே காலத்தில் 5.36 சதவீதம் என்ற அளவில் மிகவும் உயர்ந்து இருந்தது.

தரவு - இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு/தினதந்தி

பங்குச் சந்தை... அதிருதுல்ல...!

-சேதுராமன் சாத்தப்பன்

இறங்குமா... இறங்கிடுச்சுன்னா... என்ற பதைபதைப்புடன் ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தையை உற்று நோக்கும் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தான் அதிகம். இது பயமா அல்லது எச்சரிக்கையுடன் அணுகுகிறார்களா என்பது புரியாத புதிர். பங்குச்சந்தை சரிந்து கொண்டே இருந்தால், எப்போத்தான் ஏறுமோ என அங்கலாய்ப்பதும். ஏறிக் கொண்டே இருந்தால், பாரு சட்டுன்னு ஒரு நாளைக்கு அடிவாங்கத்தான் இப்படி ஏறிக்கொண்டு இருக்கும் என பலரும் புலம்புவதை கேட்க முடியும்.

இந்த மாதிரி புலம்புபவர்கள் எல்லாருமே பங்குச் சந்தையில் பணத்தை விட்டவர்களாகத்தான் இருப்பார்கள். இவர்கள் அனைவருமே பங்குச் சந்தையை பணம் காய்க்கும் மரம் என நினைத்து வந்து ஏமாந்தவர்களாக இருப்பார்கள். உலக நாடுகளில் பங்குச் சந்தைகள் நன்றாக இருப்பதும், நிறுவனங்களின் காலாண்டு அறிக்கைகள் நன்றாக இருப்பதால் பங்குச் சந்தை தொடர்ந்து ஏறிக்கொண்டு இருக்கிறது. இதுதான் உண்மை. பங்குச் சந்தையை நீண்ட கால முதலீடாக பார்ப்பவர்களுக்கு இது அமுதசுரபி என்றால் அது மிகையில்லை.

இதுவரை பங்குச் சந்தையில் ஈடுபடாதவர்கள் நாமும் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா என்று பலரும் நினைக்கும் அளவுக்கு பங்குச் சந்தை உச்சத்தில் போய் நிற்கிறது. வாரம் ஒரு புதிய உச்சத்தை எட்டுகிறது. இந்த வாரம் மும்பை பங்குச் சந்தை 15,565 புள்ளிகளுடன் முடிவடைந்தது. இது ஒரு புதிய அளவாகும். பதினைந்து வருடங்களுக்கு முன், பங்குச் சந்தை பங்கு நிலவரங்களை உடனடியாக தெரிந்து கொள்ள 'ஸ்டாக் எக்சேஞ்சு'க்கு சென்றால் தான் தெரிந்து கொள்ள முடியும். ஆதலால், ஆர்வமுள்ளவர்கள் பங்குச் சந்தைகளுக்கு முன் கூடி நிற்பர். தற்போது நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால், வீட்டில் இருந்தபடியே நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்; வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்ற நிலை வந்தவுடன் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். குஜராத் போன்ற மாநிலங்களில் காய்கறி விற்பவர்களில் இருந்து பால்காரர் வரை பங்குச் சந்தை நிலவரம் பேசும் அளவுக்கு முன்னேறியுள்ளனர். மும்பை பங்குச் சந்தை தன்னுடைய நடவடிக்கைகளை, நிலவரங்களை தற்போது குஜராத்தி மொழியிலும் வெளியிட ஆரம்பித்துள்ளது.

இந்த வார முக்கிய நிகழ்வாக டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகளை சொல்லலாம். சென்ற வாரம் வெளிவந்த இன்போசிஸ் கம்பெனியின் முடிவுகளை வைத்து பார்த்தபோது டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகள் எதிர்பார்த்ததை விடக் குறைவாக இருக்கும் என பலர் அபிப்பிராயம் தெரிவித்து இருந்தனர்.

ஆனால், அந்த கம்பெனியின் முடிவுகள் எதிர்பார்த்ததற்கு எதிராக நன்றாக இருந்ததால், பங்குச் சந்தையை தூக்கிச் சென்றது. தொடர்ந்து வந்த சில கம்பெனிகளின் (எல் அண்டு டி ரான்பாக்கி மற்றும் டி.எல்.எப்.,) முடிவுகளும் அதுபோலவே இருந்ததால் வாரம் முழுவதும் பங்குச் சந்தை களை கட்டியிருந்தது.

திங்களன்று துவக்கமே சிறிது ஏற்றத்துடன தான் ஆரம்பித்தது. முடிவாக 32 புள்ளிகள் மேலே சென்றது. கன்ஸ்ட்ரக்ஷன் பங்குகள் மேலே சென்றன. திங்களன்று மாலை வெளிவரும் டி.சி.எஸ்., கம்பெனியின் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற பயமும் சந்தையில் சிறிது தெரிந்தது.

மூன்று தினங்களாக மேலேயே சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை, செவ்வாயன்று சந்தை ஒரு குறைந்த மூடிலேயே இருந்தது. அன்றைய தினம் மேலும், கீழுமாக சென்று கொண்டிருந்த சந்தை முடிவாக 21 புள்ளிகள் சரிந்தது. நல்ல ரிசல்ட்டால் டி.சி.எஸ்., கம்பெனியின் பங்குகள் மேலே சென்றது.

செவ்வாய்க்கிழமை போலத் தான் இருந்தது புதன் கிழமையும். ஒரு 'டல்'லான நாளில் 11 புள்ளிகள் மட்டுமே மேலே சென்றது.

ரான்பாக்சி மற்றும் எல்.டி., கம்பெனிகளின் அருமையான காலாண்டு முடிவுகள் ரிலையன்ஸ் கம்பெனிக்கு சாதகமாக கிடைத்த காஸ் விலை சம்பந்தப்பட்ட கோர்ட் தீர்ப்பு ஆகியவை பங்குச் சந்தையை வியாழனன்று தூக்கிச் சென்றது. முடிவில் 248 புள்ளிகள் அதிகமானது. 67 பங்குகள் புதிய அளவை எட்டின.

வெள்ளியன்று, வியாழனின் மூடிலேயே பங்குச் சந்தை துவங்கியது. ஏறுவதும், இறங்குவதுமாக இருந்த பங்குச் சந்தை முடிவாக 15 புள்ளிகள் அதிகமாகி முடிவடைந்தது. வெள்ளியன்று இறுதியில் மும்பை பங்குச் சந்தை 15,565 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 4,566 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. இது ஒரு சாதனை அளவாகும். சாதனைகள் ஏற்படுத்தப்படுவதே முறியடிப்பதற்காக தானே. மக்களிடம் அபரிமிதமாக புழங்கும் பணம், அவர்களின் மூடு ஆகியவை பங்குச் சந்தையை மேலே கொண்டு செல்லலாம். அடுத்த வாரம் பல புதிய வெளியீடுகள் வருகிறது. குறிப்பாக மத்திய அரசாங்கத்தின் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் புதிய வெளியீடு வருகிறது. இது ஒரு பெரிய வெளியீடு ஆகும். ஆதலால் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். மார்க்கெட்டில் தற்போது இந்த வெளியீட்டுக்கு 30 முதல் 36 வரை பிரிமீயம் கிடைப்பதாக செய்திகள் வெளிவருகின்றது. முதலீடு செய்யலாம். சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த 'எவரான்' என்ற நிறுவனம் புதிய வெளியீடைக் கொண்டு வந்தது. அந்த வெளியீடு 125 தடவைக்கு மேல் உடன்பாடு செய்யப்பட்டு ஒரு சாதனை படைத்தது.

'ஸ்பைஸ் டெலிகாம்' புதிய வெளியீடு இந்த வாரம் மும்பை பங்குச் சந்தையில் பட்டியல் செய்யப்பட்டது. ரூ.46 க்கு வெளியிடப்பட்ட பங்குகள் முதல் நாள் 62 வரை விற்கப்பட்டது. பரவலாக போட்டவர்கள் எல்லாருக்கும் கிடைத்த வெளியீடு இது. ஆதலால், எல்லாரும் லாபம் அடைந்தனர். வெள்ளியன்று முடிவடைந்த 'ஓமேக்ஷ்' என்ற டில்லியைச் சேர்ந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் புதிய வெளியீடு 70 தடவைகளுக்கு மேல் செலுத்தப்பட்டு உள்ளது. பங்குகள் கிடைப்பவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். சமீப காலமாக யாரும் வேண்டாத கன்ஸ்ட்ரக்ஷன், சிமென்ட் போன்ற துறைகள் மறுபடியும் விருப்பமான துறைகளாக கருதப்படுகிறது.

இத் துறைகளின் பங்கு விலைகள் கூடிக் கொண்டே போகிறது. சந்தை மிகவும் கீழே இறங்குமா? இது ஒரு பெரிய கேள்விக் குறிதான். இந்திய பங்குச் சந்தை உலகச் சந்தைகளின் போக்கிலேயே போவதால், உலகளவில் ஏதேனும் கரெக்ஷன் வருமானால் அது இங்கேயும் எதிரொலிக்கும். அதுவரை மேலே செல்ல வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும்'நிப்டி' க்கும் 'நிப்டி பியூச்சரு'க்கும் புள்ளிகள் வித்தியாசம் இருப்பதால் பங்குச் சந்தை ஆட்டம் காண்பதற்கு அறிகுறியாக இருக்கலாம் அனுபவஸ்தர்கள் கோடிட்டு காட்டுகின்றனர். சீனா வட்டி வீதங்களை கூட்டி உள்ளது என்ற செய்தி வெள்ளியன்று சந்தை முடிவடைந்த பிறகு வந்த செய்தி. மேலும், பண வீக்கம் 4.27 சதவீத அளவில் உள்ளது என்பதாகும். இவை பங்குச் சந்தையை திங்களன்று எவ்வாறு பாதிக்கப் போகிறது என்று காத்திருந்து பார்க்க வேண்டும்.