தானாக இடுப்பில் பொருந்தும் புது ரக பேண்ட்

திருப்பூரைச் சேர்ந்த ராயல் கிளாசிக் மில்ஸ் நிறுவனம், "கிளாசிக் போலோ' டிசர்ட்டுகளை வெளிநாடுக்ளுக்கு ஏற்றுமதி செய்து நல்ல வரவேற்பை பெற்றது. இது இந்தியாவிலேயே முதன்முறையாக சுருக்கம் இல்லாத உடலுக்கு ஏற்ற வகையில் தானாக இடுப்பில் பொருந்திக் கொள்ளும் பேண்ட் அறிமுகம் செய்துள்ளது.

ரெடிமேட் பேண்ட் வாங்கிய பிறகு, தனியாக மாற்றம் செய்து தைக்க வேண்டிய வேலை இனி இல்லை. இந்த பேண்ட் துணிகள் சீன நாட்டின் நவீன தொழில்நுட்பத்தில் சுருங்காத துணியாக, இஸ்திரி செய்ய தேவை இல்லாததாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பேண்ட் விலை ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரம் ரூபாய் வரை விலையில் விற்பனை செய்யப்படும். இது தயாரிக்க பிரம்மாண்ட தொழிற்சாலை கோவை அருகே 11 கோடி ரூபாயில் ஒரு ஷிப்டிற்கு 800 பேண்ட் தயாரிக்கும் வசதியுடன் கிளாசிக் போலோ நிறுவியுள்ளது என்று ராயல் கிளாசிக் நிறுவன எக்சிகியூட்டிவ் டைரக்டர் ஆர். சிவராம் தெரிவித்தார்.

இதுவரை ரெடிமேட் பேண்ட் வாங்குபவர்களுக்கு பேண்டில் கால் உயரம் அதிகமாக இருந்தால் வெட்டி தைக்கப்படும். ஆனால் இடுப்பு சுற்றளவு சரி செய்ய முடியாது. இதனால் ரெடிமேட் பேண்ட் வாங்க யாரும் விரும்புவதில்லை.

கிளாசிக் போலோ ஆடைகள் தயாரிக்கும் ராயல் கிளாசிக் நிறுவனம் "ஆட்டோ பிட்' என்னும் தானாக இடுப்பில் பொருந்திக் கொள்ளும் டிரவுசர்களை தயாரிக்கிறது. இந்தியாவில் ரெடிமேட் பேண்ட் அணிபவர்கள் அதிகரிப்பதால் இந்த புதிய பேண்ட்களை அறிமுகம் செய்துள்ளது என்று எக்சிகியூட்டிவ் டைரக்டர் ஆர். சிவராம் தெரிவித்தார்.

உயர்ரக காட்டன் நூலில் புது ரக வாசிங் தொழில்நுட்பமான சீன நாட்டு "வெய்சி' தொழில்நுட்பத்துடன் சுருங்காத துணியில் இந்த பேண்ட் தயாரிக்கிறது. இதற்காக அதிக அழுத்தம் கொண்ட யந்திரம் வழியாக இந்த ஜவுளி தயாரிப்பு நூல் செலுத்தப் படுகிறது. இதனால் துணி சுருங்காது.

திருப்பூரை சேர்ந்த ராயல் கிளாசிக் குரூப் 225 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக 1991ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. டெக்ஸ்டைல்ஸ், ஏற்றுமதி ஆடைகள் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இதில் 110 கோடி ரூபாயில் நூற்பாலை முதல், துணிகள் நெசவு, ரெடிமேட் ஆடை தயாரிப்பு யூனிட்டுகளை நிறுவி உள்ளது.

கோவை அருகே ரெடிமேட் பேண்ட் தொழிற்சாலை

கோவை அருகே "வாகராய்' பகுதியில் 6 ஆயிரம் சதுர அடியில் 4 கோடி ரூபாயில், ஒரு ஷிப்டிற்கு 120 பேருடன் 800 ஜோடி பேண்ட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை ராயல் கிளாசிக் நிறுவனம் நிறுவி உள்ளது. இந்த தொழிற்சாலையை 7ந்தேதி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சங்கர் சிங் வகேலா திறந்து வைக்கிறார். இதையொட்டி ஒரு "பேஷன் ஷோ' திருப்பூரில் நடைபெறுகிறது என்றும் சிவராம் தெரிவித்தார்.

ராயல் கிளாசிக் நிறுவனம் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா நாடுகளில் ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் 36 ஷோரூம்கள், 1750 ஜவுளி ஷோரூம்களில் கிளாசிக் போலோ ஆடைகள் விற்பனை செய்யப்படுகிறது.

கிளாசிக் போலோ ஆடவருக்கு ரெடிமேட் ஆடைகள், "ஸ்மாஷ்' உள்ளாடைகள், ஸ்போர்ட்ஸ் ஆடைகள் தயாரிக்கிறது. ஆண்டுதோறும் பல்வேறு புதிய டிசைன்களில் ஆடைகள் அறிமுகம் செய்கிறது என்றும் சிவராம் தெரிவித்தார்.

1 comments:

said...

அப்படியா!!
சிங்கப்பூருக்கு எப்ப வருது என்று பார்க்கலாம்.