நான்கில் மூன்று பங்கு இந்தியருக்கு ஆயுள் காப்பீடு இல்லை

நான்கில் மூன்று பங்கு இந்தியருக்கு ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் இல்லை என்று பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான நேஷ னல் கவுன்சில் ஆஃப் அப்ளைடு எகனாமிக் ரிசர்ச் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியர்களின் வருவாய், செலவு, சேமிப்பு பற்றி இந்த ஆய்வில் 63 ஆயிரம் குடும்பங் களிடம் கேள்விகள் கேட்கப் பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. தங்களுக்கு எந்தவித அசம் பாவிதமும் நடந்து விடாது என்றும் சேமித்து வைத்துள்ள பணத்தைக் கொண்டு குடும் பத்தினர் நன்கு வாழலாம் என்றும் பலர் கூறியுள்ளனர். ஆயுள் காப்பீட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளாமல் இருக்க இதுதான் காரணம்.

ஆயுள் காப்பீடு செய்து கொண்டவர்களில் 14 விழுக் காட்டினர் மட்டும்தான் பெண்கள். இதுபற்றிய போதிய விழிப் புணர்வு மக்களிடையே இல்லை.உத்தரப்பிரதேசத்தில் 42 சதவிகித குடும்பங்கள் தங்கள் சேமிப்பைத் தங்கள் வீட்டிலேயே வைத்து இருக்கின்றனர். அவர்கள் எதிலும் முதலீடு செய்வதில்லை. 54 சதவிகிதம் பேர் வங்கிகளில் முதலீடு செய்கின்றனர்.
74 சதவிகிதம் மக்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கின் றனர். ஆனால் 14 சதவிகிதம் பேர் தான் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.

சேமிக்கும் விஷயத்தில் இந்தியர்கள் சாமர்த்தியசாலிகள் என்றாலும், அதை எப்படி புத்திசாலித்தனமாக சேமிப்பது என்பதுதான் தெரியவில்லை. 81 சதவிகித இந்தியர்கள் பணத்தை சேமித்தாலும், அவர்களின் அந்தப் பணம் அவர்கள் வீட்டிலோ, வங்கியிலோதான் உள்ளது. வேறு திட்டங்களில் இல்லை. குழந்தைகளின் கல்வி, அவசரத் தேவை, வயதான பிறகு பயன்படும் என்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக மக்கள் அதிக அளவில் சேமிக்கின்றனர்.

பொதுவாகக் காணும்போது, வரி கட்டுவதில் இருந்து தப்பிக்க உதவும் வழியாகத்தான், ஆயுள்காப்பீடு கருதப்படுகிறதே தவிர, அது பொருளாதார ரீதியிலான பாதுகாப்பு என்பதை அநேகர் கவனிப்பதில்லை.

0 comments: