கந்துவட்டியை ஒழிக்க வேண்டுமானால்....

வங்கிகள் கடன் தந்தால் மட்டுமே கந்து வட்டியை ஒழிக்க முடியும்! மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்




காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில், இந்தியன் வங்கி சார்பில் இந்திரா கிராமப்புற வீட்டுக் கடன் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா வில் கலந்து கொண்டு பேசும் போது அவர் கூறியதாவது:

அனைவருக்கும் தேவைக்கு ஏற்ப கடன் கிடைக்கவேண்டும் என்பதற்காக, பல்வேறு தொழில் செய்வதற்காக கடன் வழங்கும் முறைகள் எளிமை யாக்கப்பட்டு உள்ளன. கடன் தருவதுதான் வங்கிகளின் கடமை. அதை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்துவது மக்களின் கடமை.

தொழில் செய்பவர்களுக்குக் கடன் கிடைக்கும் போதுதான் உற்பத்தி பெருகும். அதன் மூலம் வேலை வாய்ப்பும் கிடைக்கும். தங்க நகைத் தொழி லாளர்களுக்கு இப்போது கடன் வழங்கும் திட்டம் மிக வும் சிறப்பாகச் செயல்படுத் தப்பட்டு வருகிறது.

கோதுமை, பருப்பு இறக்கு மதி செய்வது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சர்ச்சையைக் கிளப்புகின்றன. ஆனால் ஆயிரம் டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு யாரும் எந்த எதிர்ப்பும் காட்டுவதில்லை. அந்த அளவுக்கு தங்கம் முக்கியத்துவம் வாய்ந்தாகக் கருதப்படுகிறது.

கடந்த ஆண்டுகளில் சுய தொழில் செய்பவர்கள் 48 சத விகிதம் பேர், கந்து வட்டிக்குக் கடன் வாங்கிதான் தொழில் செய்தனர். கந்து வட்டியை ஒழிக்க வேண்டுமானால் வங்கி கள் கடன் கொடுத்தால் தான் முடியும். எனவே, எல்லா துறையினருக்கும் வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது.

2006-2007 இல் விவசாயக் கடனாக ரூ.2 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. கல்விக் கடனாக ரூ.13,424 கோடி வழங் கப்பட்டு உள்ளது. முன்பை விட இப்போது 4 மடங்கு கூடு தலாகக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. உற்பத்தி சதவிகிதம் 12 முதல் 13 வரை அதிகரித்து இருப்பதற்கு வங்கிகள் கடன் வழங்கியதுதான் காரணம்.

- இவ்வாறு சிதம்பரம் பேசினார்.


0 comments: